அதன்பின் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்று, அந்தந்த மாநில விபரங்களை சேகரிக்க உள்ளது. மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் பயணம், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், அதன்பின்னர் தேர்தல் அட்டவணை மார்ச் இரண்டாவது வாரம் வாக்கில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை நடத்தி, மே மாதத்தில் தேர்தலை முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 பொதுத் தேர்தலானது, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதேமாதிரி இந்த தேர்தலையும் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.