Sunday, September 8, 2024
Home » நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 377 இடம் கிடைக்கும் என தகவல்

நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 377 இடம் கிடைக்கும் என தகவல்

by Suresh

புதுடெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 377 இடங்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையிலான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தனியார் செய்தி நிறுவனங்கள் நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தினர்.

கடந்த 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 23 இடங்களும், காங்கிரசுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் 20 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும். இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளில், பாஜக கூட்டணிக்கு 3 இடங்களும், ‘இந்தியா’கூட்டணிக்கு 1 இடமும் கிடைக்கலாம்.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில், பாஜக கூட்டணிக்கு 45 இடங்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைக்கலாம். மேற்குவங்கத்தில் திரிணாமுல் 24 இடங்களையும், பாஜக 17 இடங்களையும், ‘இந்தியா’ கூட்டணி 1 இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சண்டிகர், அந்தமான், கோவா மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய 4 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 1 இடமும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 36 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் 10 இடங்களில் பாஜக கூட்டணியும், ‘இந்தியா’ கூட்டணி 1 இடத்தையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 19 இடங்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு 23 இடங்களும், காங்கிரசுக்கு 5 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்தமாக பாஜக கூட்டணிக்கு 377 இடங்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi