மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோருக்கு இன்று நேர்காணல்

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோருக்கு இன்று நேர்காணல் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணி முதல் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். நேர்காணலின்போது அந்தந்த மக்களவை தொகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் விருப்பமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக் கூடாது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை