சென்னை : மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.