சென்னை : மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தியாகராயர் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தப்படும் என்று பா.ம.க.தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அறிக்கையில்,”ஒன்றிய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஒன்றிய அரசு பணிகளில் இடைநிலை பணிகளில் 50%, கடைநிலை பணிகளில் 100% தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு, ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.