சென்னை : மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.கடந்த 2014, 2019-ல் நடைபெற்ற தேர்தல்களில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஏ.சி.சண்முகம்.