இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில்,
‘சபையை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எந்த உறுப்பினரும் எளிதில் தப்பிக்க மாட்டார்கள்.சபை விதிகள்படி அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உண்மைகள், புள்ளிவிவரங்கள் உட்பட பல விஷயங்களில் தொடர்ந்து பொய் கூறியது தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அவரது நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். சபை விதிகள் அனைவருக்கும் சமமாக பொருந்தும். இதில் இருந்து எவரும் தப்பிக்க எதிர்பார்க்க முடியாது. சபையை தவறாக வழிநடத்த விரும்பினால், அவர் எளிதில் தப்ப முடியாது’ என்றார்.