டெல்லி: நாடாளுமன்ற தொடக்க நாளில் அவசர நிலை குறித்து பிரதமர் பேசியது போல் சபாநாயகர் தனது பணியை தொடங்கிய முதல் நாளிலும் அவசர நிலை பற்றி பேசியதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லாவை கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.