சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் நாளை தேர்வுசெய்யப்பட உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, பாண்டி உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.