சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்தனர். துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரி மல்லே மாலிக் உள்ளிட்டோர் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகளை குறித்து ஆணைய அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.