சென்னை: மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.