சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பர் என்று இபிஎஸ் தெரிவித்தார்.