காட்பாடி: குமரப்பாநகர் பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. பணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய இளங்கோ, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.