Sunday, September 8, 2024
Home » “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக வரும் 16, 17, 18ல் பரப்புரை கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக வரும் 16, 17, 18ல் பரப்புரை கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

by Ranjith

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வரும் 16, 17,18ம் தேதிகளில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக சார்பில் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள் துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட திமுக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, திமுக முன்னணியினர் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

வருகிற 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர். பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்.

வரும் 16ம் தேதி சிவகங்கை தொகுதியில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருநெல்வேலி-கனிமொழி எம்பி, விழுப்புரம்- ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி- பொன்.முத்துராமலிங்கம், கடலூர்-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திருபெரும்புதூர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோடு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, நாமக்கல்- தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, கன்னியாகுமரி- திண்டுக்கல் ஐ.லியோனி, மயிலாடுதுறை- பேராசிரியர் சபாபதி மோகன், திருவண்ணாமலை- கோவி.செழியன்.

17ம் தேதி கிருஷ்ணகிரி- அமைச்சர் துரைமுருகன், திருச்சி- பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, திருப்பூர்- அமைச்சர் கே.என்.நேரு, அரக்கோணம்- பொன்முடி, மதுரை- ஆ.ராசா எம்பி, விருதுநகர்-கனிமொழி எம்பி, ராமநாதபுரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர்- அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி- அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திண்டுக்கல்-பொன்.முத்துராமலிங்கம், சிதம்பரம்- கோவி.செழியன்.

18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர்- அமைச்சர் துரைமுருகன், தஞ்சாவூர்-டி.ஆர்.பாலு எம்பி, பெரம்பலூர்-பொன்முடி, கரூர்- ஆ.ராசா எம்பி, புதுச்சேரி-ஆர்.எஸ்.பாரதி, பொள்ளாச்சி- திருச்சி சிவா எம்பி, காஞ்சிபுரம்- அமைச்சர் எ.வ.வேலு, தர்மபுரி-எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, நாகப்பட்டினம்-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தேனி-பொன்முத்துராமலிங்கம், நீலகிரி-திண்டுக்கல் ஐ.லியோனி, தென்காசி- முனைவர் சபாபதி மோகன், சேலம்-தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, ஆரணி-கோவி.செழியன்.

You may also like

Leave a Comment

11 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi