Saturday, June 29, 2024
Home » கடனை திருப்பி கொடுக்காததால் வேளாண்மை அதிகாரி கத்திமுனையில் கடத்தல்: வாலிபர் கைது

கடனை திருப்பி கொடுக்காததால் வேளாண்மை அதிகாரி கத்திமுனையில் கடத்தல்: வாலிபர் கைது

by Karthik Yash

நெல்லை: வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், கத்தி முனையில் வேளாண்மை அதிகாரியை காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அருகே பாலாமடையை சேர்ந்தவர் சண்முகசிகா (43). இவர் களக்காடு வேளாண்மை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தச்சநல்லூர் அருகே மேலகரையை சேர்ந்த இசக்கியம்மாளிடம் ரூ.2,30,000 கடன் வாங்கியிருந்தாராம். கடந்த 6ம் தேதி களக்காடு வேளாண்மை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சண்முகசிகா கலந்து கொண்டார். உணவு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சண்முகசிகாவை, இசக்கியம்மாளின் மகன் சுரேஷ்குமார் (36), அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோர் மிரட்டி காரில் ஏற்றி மேலகரைக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து கத்தி முனையில் அவரை ஒரு மாதத்துக்குள் பணத்தை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு விடுவித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரது நண்பர் விக்னேஷை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi