விவாதத்தின் போது பைடன் தடுமாறினார். விவாதத்தில் பைடனை விட டிரம்ப் பேச்சு சிறப்பாக இருந்ததாக தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் அதிகமான பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். வயது காரணமாகவும், உடல் நிலை காரணமாகவும் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.இந்த விமர்சனங்களால்,அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில்,விர்ஜினியாவில் கட்சி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பைடன்,‘‘நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்கிறேன். விவாத நிகழ்ச்சியின் போது சிறிது நேரம் தூங்கி விட்டேன்.அதனால் என்னுடைய கவனத்தை முழுமையாக செலுத்த இயலவில்லை. என்னுடைய உரை சிறப்பாக இல்லை என்பது தெரியும். ஆனால், அடுத்து 4 ஆண்டுகளுக்கு நாட்டை வழி நடத்தி செல்வதற்கான திறன் எனக்கு உள்ளது’’ என்றார்.
கமலா ஹாரீஸ்க்கு வாய்ப்பு?
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்து கருத்து கணிப்பின்படி தற்போது துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ்சுக்கு அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா- பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்பா- கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத பேர் டிரம்புக்கு ஆதரவாகவும், 45 சதவீதம் பேர் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிபர் ஒபாமா மனைவி மிட்ச்செல் ஒபாமாவை தேர்தலில் போட்டியிட வைக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மிட்ச்செல்லுக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.எனவே, கமலா ஹாரிஸ்க்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளதால் அதிபர் வேட்பாளராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.