இதனையடுத்து ‘‘செம்மொழித் தமிழின் சிறப்பு” எனும் தலைப்பில் சு.சதாசிவம், ‘‘மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்” எனும் தலைப்பில் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ‘‘நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்” எனும் தலைப்பில் விமலா அண்ணாத்துரை, ‘‘புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்” எனும் தலைப்பில் நெல்லை ஜெயந்தா, ‘‘கண்களைத் திறந்த கதை உலகம்’’ எனும் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன், ‘‘அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும்’’ எனும் தலைப்பில் விஜயகுமார் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினர்.
முடிவில் கல்வி நிலைய தாளாளர் அமுதா பாலகிருஷ்ணன், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கினார். இந்த இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையில் சங்கரா கல்லூரி, எஸ்எஸ்கேவி மகளிர் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.