வழக்கமாக சிறை கைதிகளுக்கு வெளி உணவு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஆனால் சிறைக்காவலர் ஒருவர், மது வாங்கி வந்து சிறையில் உள்ள தனது தங்கும் அறையில் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலர் மது அருந்தியதாக வீடியோ வெளியான நிலையில் சிறை தலைமை காவலர் ஜெயக்குமார் பணியிடைநீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உத்தரவு அளித்துள்ளார்.