இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கே.கவிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, அவருக்கு எதிரான விசாரணையை ஏற்கனவே விசாரணை அமைப்புகள் முடித்துவிட்டதாகக் கூறி ஜாமீன் கோரினார். மேலும் இந்த இரண்டு வழக்குகளிலும் இணை குற்றவாளியான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவர் குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள், கே.கவிதா குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயிடம் என்ன ஆதாரம் உள்ளது? என்றும், அதன் விபரங்களை காட்டுமாறும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், தொடர் விசாரணைக்கு பின்னர் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.