ஆனால், 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுக்கான மதுபான விற்பனை உரிமம் உள்ளிட்டவைகளுக்கு 9 லட்சத்து 18 ஆயிரத்து 750 ரூபாயை கட்டணமாக எங்களிடம் இருந்து கலால் துறை வசூலித்து விட்டது. இந்த தொகையை திருப்பிக் கேட்டு 9 முறை மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. எனவே எங்களின் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பார் திறக்கவே இல்லை என்றபோது, உரிமம் கட்டணத்தை வசூலிக்க முடியாது. எனவே, அந்த தொகையை திருப்பி அளிப்பது தொடர்பான மனுவை கலால் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கோரிக்கை மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கலால்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.