சென்னை: சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் டாஸ்மாக் கடைகளை நாளை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுபான கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.