தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ” விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுவிலக்கு சட்டத்தில் இன்னும் பல்வேறு திருத்தங்கள் தேவைக்கேற்ப கொண்டு வரப்படும். கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் கடுமையான திருத்தங்களும் கொண்டு வரப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.