சென்னை: தமிழ்நாடு முழுவதும் விஷச் சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,657 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் உத்தரவை அடுத்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.