சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் விதிகளுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட விதிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 14-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.