இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதைஎதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்து, தீர்ப்பை கடந்த 21ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.