டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு குற்றவாளியிடம் பாஜக ரூ.55 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்தோ ஃபார்மா இயக்குநரிடம் பாஜக ரூ.55 கோடி நன்கொடை பெற்றது அம்பலமாகியுள்ளது. ரூ.55 கோடிக்கு பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய பின், அரவிந்தோ ஃபார்மா இயக்குநர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மதுபான கொள்கை வழக்கு குற்றவாளியிடம் ரூ.55 கோடியை பாஜக பெற்றது குறித்து ED விளக்கம் தர வேண்டும் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.