பின்னர் அவர்கள் தடி மற்றும் இரும்பு பைப்பால் கிறிஸ்துராஜ், மார்ஷல் டிட்டோவை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கிறிஸ்துராஜ் புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, சக்திவேல், சண்முகம், பாலு மகேந்திரன், ராஜீவ் காந்தி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கடலூர் மாவட்ட முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சக்திவேல், சண்முகம், பாலு மகேந்திரன், ராஜீவ் காந்தி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது’ என்றார்.