பெரம்பூர்: மணிப்பூரில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமை செய்யப்பட்ட செயல்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெரு சந்திப்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கு 44வது வட்ட செயலாளர் போவாஸ் கிருபாகரன் தலைமை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சி.பி.சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் தமிழினியன், பெரம்பூர் பகுதி செயலாளர் கல்தூண் ரவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘’மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று மணிப்பூரில் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மணிப்பூர் கலவரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய பாஜ அரசு பதவி விலக வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை முழங்கினர்.