உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய தற்கொலைக்கு கேரள அரசு தான் காரணம் என்று இவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
கடன் தொல்லை காரணமாக விவசாயி பிரசாத் தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறுகையில்,கேரள அரசு வீண் ஆடம்பர செலவில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களும் நிறைவேற்றுவதில்லை. விவசாயியின் தற்கொலைக்கு கேரள அரசின் அலட்சியம் தான் காரணமாகும் என்றார்.கவர்னர் நேரில் அஞ்சலி: கவர்னர் ஆரிப் முகம்மது கான் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விவசாயி பிரசாத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.