Sunday, June 30, 2024
Home » நீட்டை ஒழிப்போம்…கல்வி உரிமையையும், மாணவர்கள், பெற்றோர்களின் உயிரை காக்கவும் உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்போம்: உதயநிதி ஸ்டாலின் டிவீட்

நீட்டை ஒழிப்போம்…கல்வி உரிமையையும், மாணவர்கள், பெற்றோர்களின் உயிரை காக்கவும் உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்போம்: உதயநிதி ஸ்டாலின் டிவீட்

by Lavanya
Published: Last Updated on

சென்னை: நீட்டை ஒழிப்போம்: கல்வி உரிமையையும், மாணவர்கள், பெற்றோர்களின் உயிரை காக்கவும் உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு ஆளுநரைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடத்துவதாக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளது. இந்நிலையில் அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் கூறியதாவது, நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது.

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் ஒன்றிய அரசையும் – ஆளுநரையும் கண்டித்து, திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் வழிகாட்டுதலின்படி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 அன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், நம் மாணவர்கள், பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்.

 

You may also like

Leave a Comment

12 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi