சிவகங்கை: சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘அதிமுகவை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது. தற்போது அதிமுகவில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் இணைவோம்.’’ என்று தெரிவித்தார்.