சிறுத்தை தோல் கடத்திய 4பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு அருகே நிறுத்தியிருந்த காரின் அருகே 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அந்த 3பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் காரில் சோதனையிட்டனர்.

காரில் சிறுத்தையின் தோல் இருந்தது தெரிய வந்தது. இந்த 3பேர் கும்பலின் பின்னணியில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோல் மற்றும் வாகனங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு சிறுத்தையின் தோலை எங்கிருந்து, யாருக்கு கடத்தி செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு