காரில் சிறுத்தையின் தோல் இருந்தது தெரிய வந்தது. இந்த 3பேர் கும்பலின் பின்னணியில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோல் மற்றும் வாகனங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு சிறுத்தையின் தோலை எங்கிருந்து, யாருக்கு கடத்தி செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.