இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை மாட்டு தொழுவத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கன்று குட்டியை கொன்று தின்றுள்ளது. இது குறித்து குருசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கிராம மக்கள், பண்டிபுரா வனப்பகுதியின் ஓம்காரா பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என புகார் அளித்தனர்.