கன்று குட்டியை வேட்டையாடிய சிறுத்தை

குண்டல்பேட்டை: மாட்டு தொழுவத்தில் கட்டிவைத்திருந்த கன்று குட்டியை சிறுத்தை கொன்று தின்ற சம்பவம் குண்டல்பேட்டை அருகே நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை தாலுகாவின் குருபரஹூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது வீட்டில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் பசு கன்று குட்டியை ஈன்றுள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை மாட்டு தொழுவத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கன்று குட்டியை கொன்று தின்றுள்ளது. இது குறித்து குருசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கிராம மக்கள், பண்டிபுரா வனப்பகுதியின் ஓம்காரா பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என புகார் அளித்தனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு