இது தொடர்பான 2வது நோட்டீசும் ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்விடம், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், எம்.எல்.ஏ. கு.க.செல்வம் காலமாகிவிட்டதால் அவரைத்தவிர, மற்ற எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29க்கு தள்ளிவைத்தனர்.