சென்னை: சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக ஆட்சியின்போது திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றனர். குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அளித்த உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.