சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதங்களை முன்வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் காலமானதால் அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் கைவிட்டது. முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை ஜூலை 29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.