சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விஷச் சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.