சென்னை: தாய்ப்பாலை வணிகரீதியில் விற்பதோ, தாய்ப்பாலில் தயாரித்த பொருட்களை விற்பதோ கூடாது என இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தாய்ப்பாலை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்ப்பால் விற்கப்படுவதை மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.