ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

ஊட்டி: ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கான ரூ.822 கோடி குத்தகை பாக்கி நிலுவை வைத்திருந்ததால் அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் குதிரை பந்தய மைஇந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின் போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயத்தை நடத்தி வருகிறது.  கடந்த 2001க்கு பின் 2023ம் ஆண்டு வரை கடந்த 22 ஆண்டுகளாக குத்தகை தொகையை மெட்ராஸ் கிளப் நிர்வாகம் வழங்கவில்லை.

இதனால், நிலுவையில் உள்ள குத்தகை தொகை, உயர்த்தப்பட்ட தொகை என ரூ.822 கோடி குத்தகை தொகை பாக்கியை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வரி பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நேற்று ஊட்டி ஆர்டிஓ மகராஜ் தலைமையிலான அதிகாரிகள் குதிரை பந்தய மைதான கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

அரசு கையகப்படுத்திய 52.34 ஏக்கர் நிலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பெபிதா தலைமையில் தோட்டக்கலை ஊழியர்கள் அங்கு வந்து பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கினர். மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை