Sunday, September 8, 2024
Home » மா.செ.க்கு எதிராக இலை தலைமையை மிரட்டும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்; wiki யானந்தா

மா.செ.க்கு எதிராக இலை தலைமையை மிரட்டும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்; wiki யானந்தா

by MuthuKumar

‘‘சேலத்துக்காரர் போட்ட தூண்டிலில் அல்வா மாவட்ட செயலாளர் சிக்கியதால ஆள் தேடிக்கிட்டு இருக்கிறாராமே தேனிக்காரர்…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில தேனிக்காரர் நீக்கப்பட்ட பின்னர் முதன்முதலாக சந்திக்கும் தேர்தல் வருகிற நாடாளுமன்ற தேர்தலாகும்.. இதில் ஒருவருக்கொருவர் பலம் காட்ட வாய்ஸ் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.. ஆனா, தேனிக்காரரும், சேலம்காரரும் ஆளுக்கொரு அணியாக பிரிந்து விட்டதால இலைக்கட்சி கூடாரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஒரு தலைவர்களும் எட்டிக்கூட பார்க்கவில்லை.. தேமுதிகவை கூட தங்கள் அணியில் சேர்க்க இலைக்கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் வலிய சென்று பேச்சுவார்த்தை நடத்தினாங்க.. அப்படி இருந்தும்கூட உடன்பாடு எட்டப்படல.. தேனிக்காரரும், தேசிய கட்சி கூட்டணியில்தான் இருப்போம்னு அறிவித்தாலும் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது இன்னும் தெரியவில்லை. ேதர்தல் நெருங்கும் நிலையில் தேனிக்காரர் பலம் என நினைக்கும் அல்வா மாவட்டத்திற்கு சேலம்காரர் தூண்டில் போட்டாராம்.. இதில் தேனிக்காரர் அணியின் மாவட்ட செயலாளரே சிக்கி விட்டார். முன்னாள் எம்எல்ஏவின் மகனாக அவரை தனது அணிக்கு இழுத்துப் போட்டு தேனிக்காரருக்கு ஷாக் கொடுத்துள்ளார் சேலம்காரர். மாவட்ட செயலாளர் டாடா காட்டி விட்ட நிலையில் அடுத்து யாரை போடுவதுன்னு தேனிக்காரர் ஆள் தேடிக் கொண்டிருக்கிறாராம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

‘‘மா.செ.க்கு எதிரா இலை நிர்வாகிகள் தலைமையை மிரட்டுறதா சேதி வருதே..’’ என இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘நாட்டின் தென்கோடி முனையில் உள்ள கடலோர மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் இலை கட்சி சார்பில் மீனவ பிரதிநிதி ஒருவரை தான் வேட்பாளராக அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வந்ததாம். இவரு மாற்று கட்சியில் இருந்து சமீபத்தில் தான் இலை கட்சியில் ஐக்கியமானவர். கட்சி எதிர்பார்த்த பசை தன்மை ெகாண்டவர் என்பதால், இவரை முன்னிறுத்தி தான் கட்சியில் பிரசார கூட்டமும், நிகழ்ச்சியும் நடந்து வந்தது. கடலோர மீனவர்கள் ஓட்டுக்களை கொத்தாக அள்ளி விடலாம் என்றும், கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்து இருந்தனர். இதனால் இலைகட்சி தலைமையும் இவரை டிக் செய்தது. ஆனால், இப்போது பசையானவர், போட்டியிட விரும்பவில்லை என்கிறாராம். இது தொடர்பாக சென்னைக்கே நேரடியாக சென்று பேசியதாக தகவல். இந்த முறை எனக்கு நாடாளுமன்ற தொகுதி வேண்டாம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கொடுங்க என கேட்டு இருக்கிறாராம். இதனால இப்போது புதிதாக வேட்பாளரை தேட தொடங்கி உள்ளார்களாம். விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் பட்டியலை வைத்து தேடும் படலம் நடக்கிறதாம். ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மா.செ. பொறுப்பில் இருந்த ஒருவர் தான் இந்த தொகுதியில் இலை கட்சியில் போட்டியிட்டார். இப்போது பசையானவர் தனக்கு வாய்ப்பு வேண்டாம் என்பதால், இந்த மா.செ. மிகவும் உற்சாகமாகி நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளாராம். ஆனால், இந்த மா.செ.க்கு சீட் கொடுத்தா உள்ள ஓட்டும் டமால் ஆகி விடும் என இலைகட்சி தலைமையை இப்போதே நிர்வாகிகள் மிரட்ட தொடங்கி இருக்கிறார்களாம். எனவே புதிய முகம் வாய்ப்பு பெறும் என்கிறார்கள்..’’ என்று விவரித்தார்

‘‘பில்டப் குடுத்து ஏமாத்துறதே வேலையா போச்சாமே..’’ என்று புதிர்க்கேள்வி போட்டார் பீட்டர் மாமா.
‘‘யாரைச் சொல்றீங்கன்னு புரியுது. பார்லிமென்ட் எலக் ஷன் நெருங்கி வரும் நிலையில் நாங்களும் களத்தில் இருக்கிறோம்னு காட்ட தாமரை கட்சி பல்வேறு தகிடு தத்தங்களை செஞ்சுகிட்ேட இருப்பது ஊரறிஞ்ச விஷயம். அதிலும் கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட இலை கட்சி தலைவரின் சொந்த ஊரில் ஏதாவது செய்தே ஆகனும்னு முட்டிமோதி குட்டிக்கரணம் போடுறாங்களாம் தாமரை நிர்வாகிகள்.

இந்தவகையில் புதுசா அவங்க, கட்சிக்கு ஆள்சேர்த்த விவகாரம் மீண்டும் நகைப்பை ஏற்படுத்தி இருக்காம். மாங்கனி சிட்டியில் இருக்கிற ஆபீசில் பிரதான கட்சிகளில் இருந்து விலகி 500க்கும் அதிகமானவங்க, எங்க கட்சியில் சேரப்போறாங்க. எல்லோரும் வாங்கன்னு மீடியாக்களுக்கு அழைப்பு விடுத்தாங்களாம். மாநில துணைதலைவரு வாறாரு. முக்கியமான மெசேஜ் சொல்லப்போறாரும்னு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்தாங்களாம்.
ஆனா அவங்க குறிப்பிட்ட மாநில துணைத்தலைவர் வரவே இல்லையாம். மற்ெறாரு தலைவர் வந்தாராம். பிரதான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாருன்னு மீடியாக்கள் தேடிப்பார்த்தால் அப்படியும் யாரும் சிக்கலையாம். சரி 500 பேரு எங்கே என்று கேட்டால், 100 கணக்கு காட்டுவதே பெரும்பாடா போச்சாம். அப்புறம் கட்சியில் சேர வந்தவர்களிடம் பேசியதில், பெரும்பாலானவர்கள் நிர்வாகிகளின் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ற குட்டு அம்பலமாச்சாம். அது சரி. இப்படி பில்டப் குடுத்து ஏமாத்துறதே இவங்க வேலையா போச்சு என்று சலித்துக் கொண்டே வெளியேறியதாம் மீடியாக்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

17 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi