Tuesday, September 17, 2024
Home » கோகுல மக்கள் கட்சி தலைவர் தலைமையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை

கோகுல மக்கள் கட்சி தலைவர் தலைமையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை

by Francis

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் திருவுருவ சிலைக்கு கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் அவரது கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் தன் தாய் மண்ணை காக்க தன் உயிரையும் துச்சமென கருதி வெள்ளையனின் பீரங்கி குண்டுகளை தன்மார்பேந்தி வீரமரணம் அடைந்தார் அவரின் தியாகத்தை போற்றும் வகையில் 314-வது பிறந்த நாளையும், 267-வது நினைவு நாளுமான இன்று சென்னை, எழும்பூரில் உள்ள அவருக்கு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அவரின் குருபூஜை விழாவை கொண்டாடப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவித்து கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி முதல் கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு தொடர்வண்டி அல்லது தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய ஏதாகிலும் ஒரு விமான நிலையத்திற்கு மாவீரர் அழகுமுத்துக்கோன் பெயர் சூட்ட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரன் அழகுமுத்துக்கோன் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுக வேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாறை இன்றைய இளையசமுதாய மக்களுக்கு வரலாறும் நாட்டுப்பற்றும் தெரியும் வகையில் நினைவு மண்டபம் கட்டி அவருடைய வரலாற்றை அரசு பாடப்புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து யாதவர்களின் கால்நடைகளை மேய்க்க ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் இடங்களை மந்தைவெளி புறம்போக்கு இடங்களை காக்கும் விதமாக அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தொடர்ந்து மந்தைவெளி புறம்போக்கு இடங்களை ஆடு, மாடு மேய்க்கும் இடமாகவே பாதுகாத்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் வாழ்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களில் அதிகமாக கல்வி, வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்டுள்ள யாதவ சமுதாய மக்களுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் வரையில் தமிழக யாதவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோகுல மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

You may also like

Leave a Comment

sixteen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi