3 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் நடத்தப்படும் 3 ஆண்டு எல்எல்பி (மேன்மை) சட்டப் படிப்பில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் www. tndalu.ac.in என்ற இணைய தளத்தில் இருந்து இன்று முதல் 24ம் தேதி வரை பூர்த்தி செய்து அனுப்பலாம். இதன்படி, 3 ஆண்டு எல்எல்பி (மேன்மை) சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்