செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஒன்றிய அரசை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பங்கள் நடைபெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும். அம்மாநிலத்தில் அமைதி நிலவ புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கோரி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.