மீண்டும் அவர் கடைக்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி மணிஷா, தனது உறவினர் லோகேஷ் என்பவரிடம் தெரிவித்து, வீட்டில் பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டிற்குச் சென்று லோகேஷ் பார்த்தபோது, செந்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், செந்திலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.