அதன்படி, சமீபத்தில் மறைந்த ஆலப்பாக்கம் கு.சண்முகம் மற்றும் க.சரஸ்வதி ஆகிய இரண்டு மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி, தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, மறைந்த இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச்சேவை நிறுவன தலைவர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிருவாக இயக்குநர் சிவராசு, கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் ஷரண்யா அறி, மாமன்ற செயலாளர் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.