திருமலை: லட்டு விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை அளிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும். திருப்பதி லட்டில் மிருக கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.