மதுரை: பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த மடிக்கணினி திருடு போன வழக்கில் எல்காட் மேலாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மடிக்கணினி திருடு போன விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்தது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மடிக்கணினி வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியது.