இமாச்சலில் நிலச்சரிவு: 2 பேர் பலி

சிம்லா: இமாச்சலில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஜங்கா சாலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் இருந்த 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் இருந்த 5 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். ஆனால் 2 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியோடு கட்டிட இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

Related posts

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு