அருணாசலில் நிலச்சரிவு

இடாநகர்: அருணாசலப்பிரதேசத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் பல்வேறு மாவட்டங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ஆலோ-பாங்கின் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவினால் மண் குவியல்கள் குவிந்துள்ளன. தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலமாக இவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. லோக் பெங் அருகே நான்கு இடங்களில் சாலைகளில் மண் குவியலால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு