இடாநகர்: அருணாசலப்பிரதேசத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் பல்வேறு மாவட்டங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ஆலோ-பாங்கின் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவினால் மண் குவியல்கள் குவிந்துள்ளன. தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலமாக இவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. லோக் பெங் அருகே நான்கு இடங்களில் சாலைகளில் மண் குவியலால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.